ராணி முகர்ஜியை தெரிந்து கொள்வதற்கு ரொம்ப வருடங்களுக்கு முன்பாகவே எனக்கு பிரணாப் முகர்ஜியைப் பற்றி கொஞ்சம் அறிமுகமுண்டு. மிகவும் திறமையான அரசியல்வாதி. காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சி பிரச்சனையை கிளப்பினாலும் அதை சரி செய்ய இவரைத்தான் களத்தில் இறக்குவார்கள். நேரம் காலம் இல்லாமல் துண்டு துக்கடா கட்சிகள் கொடுக்கும் எல்லா தொந்தரவுகளையும் தனி மனிதராக நின்று இவர் சமாளிப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம். வெளியுறவு, பாதுகாப்பு, நிதி என பல முக்கிய இலாக்காக்களை கையாண்ட அனுபவசாலி. நேரு குடும்பத்து வாரிசுகள் இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு பிரதமர் பதவி மீது குறி வைக்காமல் பொறுமை காத்தால் இவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக பிரகாசமாக இருக்கிறது. கொல்கத்தா காளியின் அருள் இவருக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்தியப் பிரதமர்களின் வரிசையில் இவர் சேர்வது சர்வ நிச்சயம்.
அரசியல் அனுபவம், வயது, பிற கட்சிகளை அனுசரித்துப் போவது என பல சாதகமான விஷயங்களை வைத்துக்கொண்டு எந்த நேரமும் பிரதமர் பதவியில் அமர்ந்து விடக்கூடிய திறமையுள்ள இவர் சில நேரங்களில் ஏதாவது ஏடாகூடாமாக பேசி தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொள்வது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. தவறு செய்யும் அரசியல்வாதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம் என இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது ஆச்சரியத்தை அளித்தது. தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு திரும்ப அழைக்கும் உரிமை இல்லை என இவர் சொல்வது ஏற்ககூடியதாக இல்லை.
அரசியல்வாதிகளுக்கு உள்ள செளகரியம்/அசெளகரியம் இரண்டுமே இவர்கள் ஏதாவது தவறு செய்தால் இவர்களை Demote/Transfer எல்லாம் செய்ய முடியாது என்பதுதான். மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தவறு செய்யும் அல்லது கடமையை ஒழுங்காக செய்யாத அரசியல்வாதிகளை “Impeach” செய்து வெளியே அனுப்புவது தான். ஆனால் அந்த உரிமை மக்களுக்கு இல்லை என இவர் மறைமுகமாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அட்லீஸ்ட் அதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு வழியை சொல்லுவார் எனப் பார்த்தால் மனிதர் அமைதியாக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்கள் ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் கொஞ்சம் Peculiar கேரக்டர் உள்ள ஆட்கள், தேர்தல் வரும் வரை ஒரு மாதிரியாகவும், தேர்தல் முடிந்தவுடன் வேறு மாதிரியாகவும் மாறி விடுவதால் மக்களுக்கு இவர்களை டீல் செய்வதில் ஏக சிரமம் ஏற்பட்டு விடுகிறது. நம்மூரில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புகுந்து விளையாடிவிடுகிறார்கள்.
ஒரு சிறு விஷயத்தை தெரிந்தோ தெரியாமலோ சரியாக அனுகாத காரணத்தால் ரிச்சர்ட் நிக்ஸனை Impeach செய்யும் அளவிற்கு சென்று இறுதியில் அவர் பதவியையே விட்டே விலக நேரிட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் அடுத்த நாட்டை மேற்கோள் காட்டி பேசும் நம்மூர் ஆட்கள் இம்மாதிரியான விஷயங்களை மட்டும் செளகரியமாக மறந்துவிடுவது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. அதிலும் பிரணாப் போன்ற முதிர்ந்த அரசியல்வாதி இப்படி பேசுவது சகிக்க முடியவில்லை.
வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் திரும்ப கொண்டு வர முடியாது, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என வரிசையாக இவர் சொல்வது முடியாது என்ற வார்த்தையை மட்டுமே. இதைச் சொல்வதற்கு இவர் அமைச்சராக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இவருக்கு பிரதமர் பதவியை அளிக்க முன்வந்தால் அதையும் ஏற்க முடியாது என சொல்லி விடுவாரா எனத் தெரியவில்லை.
Monday, November 21, 2011
Wednesday, November 16, 2011
Good – Bad – Ugly
சீட்டு கொடுத்து அமைச்சர் பதவியும் கொடுத்த தலைமைக்கு தன்னோட விசுவாசத்தை காண்பிக்க எவ்வளவோ வழிகள் இருக்க, ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்தில் “Barefoot” ஆக திரிவது என முடிவு செய்து அதை ஏகத்துக்கும் பப்ளிசிட்டி வேறு செய்துவிட்டார். அம்மா இருக்கும் இடம் (தனக்கு) கோயில் அதனால் காலணி அணிவதை தவிர்ப்பதாக அறிவித்து மற்ற சீனியர் அமைச்சர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் இவர். நியாயமாக பார்த்தால் இவருக்கு ஓட்டளித்து சட்டசபைக்கு அனுப்பி வைத்த மக்களைத்தான் இவர் தெய்வமாக கருதி இருக்கவேண்டும். அந்த லாஜிக்ப்படி பார்த்தால் அண்ணன் காலணியை தவிர்த்திருக்க வேண்டிய இடம் இவரின் சொந்த தொகுதியில் தான். பதவி கொடுத்த போதையில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். பெங்களூரும், ஐதராபாத்தும், குர்கானும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை போட்டிபோட்டு தங்கள் பக்கம் இழுத்து வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்க, நம்ம அமைச்சர் ஏதாவது வித்தியாசமாக செய்து அந்த நிறுவனங்களை சென்னைக்கு தள்ளிக்கொண்டு வருவார் எனப் பார்த்தால் இவர் செருப்பு போடமாட்டேன், பருப்பு சாப்பிட மாட்டேன்னு வேளைக்கு ஆகாத சமாச்சாரங்களையெல்லாம் கையில் எடுத்து ஒட்டு மொத்தமாக சொதப்பி எடுத்துவிட்டார். பொறுத்துப் பார்த்த அம்மா பொங்கி எழுந்துவிட்டார், விளைவு அண்ணனுக்கு அமைச்சர் பதவி காலி. அடுத்த முறை தொகுதிக்குள் சென்று ஓட்டு கேட்கும் போது யாரவது ஒரு குறும்புக்கார ஆசாமி இந்த மேட்டரை கொஞ்சம் சீரியஸாக கையில் எடுத்தால் அண்ணனுக்கு எம்.எல்.ஏ சீட்டும் காலியாகிவிடும் அபாயம் இருக்கிறது. மம்மி கிட்டேயே உங்க வேலைய காட்டுறீங்களா…:-)
----------------------------------------------------------------------------------
Public Exam Fever ரொம்ப கொடுமையானது. பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தவுடனே பசங்களுக்கு பிரஷர் எகிறிடும். வாழ்க்கையின் முதல் பப்ளிக் எக்ஸாம் என்பதால் ஒருவிதமான excitement கலந்த fever வருஷம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கும். காலையில ஒரு டியூஷன், மாலையில ஒரு டியூஷன்னு போட்டு பசங்கள கசக்கி பிழிஞ்சுருவாங்க. ஏதாவது கேட்டா, உன்னோட லைப் நல்லா இருக்கனும்னு தான் இதெல்லாம் பண்ணுறோம்னு ஒரு சமாதானத்த வேற ரெடியா வச்சிருப்பாங்க. பொதுவா எல்லா பசங்களும் இந்த டயலாக் கேட்டவுடனே கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டு கடைசி நேரத்துல அடிச்சி புடிச்சி படிச்சு ஒரு நல்ல ஸ்கோர ஒப்பேத்திடுவாங்க. ஆனா நம்ம பாண்டிச்சேரிக்காரர் கொஞ்சம் அசந்து தூங்கிட்டாரு போல இருக்கு. எப்பவோ எழுதி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வை அமைச்சராக பொறுபேற்ற பின்புதான் முடிப்பேன்னு மணக்குல விநாயகர் கோயிலில் சபதம் ஏதாவது போட்டிருந்தாரான்னு தெரியல. சரி போனது போச்சு, ஏதோ ஆர்வ கோளாறுல இப்பவாச்சும் இவருக்கு படிக்கனும்னு தோனுச்சேன்னு சந்தோஷப்பட்டா மனுஷன் இப்படி தில்லாலங்கடி வேலைய செய்ஞ்சுட்டு கண்ணாமூச்சி காட்டிகிட்டு இருக்காரு. கல்வித்துறை அமைச்சர் பத்தாவது படிச்சிருக்கனும்னு எந்த சட்டமும் இந்த நாட்டுல இல்ல….எந்த தகுதியும் இல்லை என்பதுதான் அரசியலுக்கு தேவையான முக்கியத் தகுதியே. அப்புறம் எதுக்கு இவருக்கு இந்த விபரீத ஆசையெல்லாம். இவர சொல்லி தப்பு இல்ல இவர் கூட இருக்குற ஏதோ ஒரு அடிபொடி தான் அண்ணனை இப்படி உசுப்பேத்தி விட்டிருக்கனும். இப்ப பாருங்க ரணகளமாகிடுச்சு. நல்ல பிள்ளையாய் இவர் போய் பரீட்சையை எழுதுவாருன்னு பார்த்தா இவரோட Substitute-ஐ அனுப்பி வச்சிருக்கார் மனுசன். கிரிக்கெட் மேட்சுன்னு நெனச்சிட்டாரு போல. பாண்டிச்சேரி முதல்வர் கல்வித்துறையை சரியான ஆளுகிட்ட தான் ஒப்படைச்சிருக்காரு. நல்லவேளை இவரை சுகாதாரத் துறைக்கு அமைச்சராக நியமிக்கவில்லை…நியமித்திருந்தால் இந்நேரம் முன்னாபாய் M.B.B.S மாதிரி ஏதாவது கலாட்டா பண்ணியிருப்பார். எப்படியோ பாண்டிச்சேரி அரசியல்ல அண்ணனுக்கு தனி இடம் கிடைச்சு போச்சு.
வரலாறு முக்கியம் அமைச்சரே !
----------------------------------------------------------------------------------
மம்தா தீதி ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க….தேசிய அரசியல் தெரிஞ்சவங்களுக்கு தீதிய பத்தி நல்லாத் தெரியும். அதிரடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் இப்படி கலந்து கட்டி அடிச்சு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா தரப்பையும் சில நேரங்களில் அலற வைத்துவிடுவார். வார்டு கவுன்சிலர்களே பள பளன்னு பவனி வரும்போது தீதியின் எளிமை அரசியலைத் தாண்டி அவர் மேல் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்த தவறியேதில்லை. அசுர பலத்துடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயற்சித்தும் அசைக்க முடியாத காம்ரேடுகளின் கோட்டையை அசால்ட்டாக தூக்கி ஓரமாக வைத்துவிட்ட பெருமை முழுக்க முழுக்க தீதிக்கே சொந்தம். இப்படி பல பெருமைகளை தனது அரசியல் பக்கங்களில் நிரப்பிக் கொண்டவர் சமீப காலங்களில் அடிக்கும் அரசியல் ஸ்டண்டைப் பார்த்தால் அடுத்தமுறை மீண்டும் காம்ரேடுகளை இவரே பதவியில் கொண்டுவந்து அமர்த்திவிடுவார் போலத் தெரிகிறது. பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவேன் என பரபரப்பாக அறிக்கை எல்லாம் விட்டவர், மறு நாளே U-Turn அடிப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. இதை வேறு அரசியல் தலைவர்கள் யாராவது செய்திருந்தால் ஆச்சரியப்படாமல் இருந்திருக்கலாம் ஆனால் தீதி செய்ததுதான் கொஞ்சம் புருவத்தை உயரச் செய்துவிட்டது. ஒட்டு மொத்த மக்களையும் கொதிக்கச் செய்துள்ள இந்த விலை உயர்வை திடமாக எதிர்த்து கொஞ்சம் ஆறுதல் தருவார் எனப் பார்த்தால் இவர் வடிவேல் பாணியில் அடுத்த முறை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு மக்களை அந்தரத்தில் விட்டுவிட்டார். இன்னும் ஆறு மாதத்திற்குள் அரசாங்கம் பெட்ரோல் விலையை கண்டிப்பாக உயர்த்தும். உத்திரப்பிரதேச தேர்தலுக்காக வேண்டுமென்றே விலையை செயற்கையாக ஏற்றிவிட்டு இப்போது குறைப்பது போல பாவ்லா காட்டியிருக்கிறார்கள். ஆக்ஷன் ராணி அடுத்த முறை என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். போதாத குறைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தன் கட்சிக்காரரை விடுவித்ததாக சமீபத்தில் வந்த செய்தியை பார்த்தபோது கூடிய விரைவில் தீதி மற்ற சராசரி அரசியல்வாதிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலத் தெரிகிறது. என்னமோ செய்யுங்க தீதி.
----------------------------------------------------------------------------------
Public Exam Fever ரொம்ப கொடுமையானது. பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தவுடனே பசங்களுக்கு பிரஷர் எகிறிடும். வாழ்க்கையின் முதல் பப்ளிக் எக்ஸாம் என்பதால் ஒருவிதமான excitement கலந்த fever வருஷம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கும். காலையில ஒரு டியூஷன், மாலையில ஒரு டியூஷன்னு போட்டு பசங்கள கசக்கி பிழிஞ்சுருவாங்க. ஏதாவது கேட்டா, உன்னோட லைப் நல்லா இருக்கனும்னு தான் இதெல்லாம் பண்ணுறோம்னு ஒரு சமாதானத்த வேற ரெடியா வச்சிருப்பாங்க. பொதுவா எல்லா பசங்களும் இந்த டயலாக் கேட்டவுடனே கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டு கடைசி நேரத்துல அடிச்சி புடிச்சி படிச்சு ஒரு நல்ல ஸ்கோர ஒப்பேத்திடுவாங்க. ஆனா நம்ம பாண்டிச்சேரிக்காரர் கொஞ்சம் அசந்து தூங்கிட்டாரு போல இருக்கு. எப்பவோ எழுதி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வை அமைச்சராக பொறுபேற்ற பின்புதான் முடிப்பேன்னு மணக்குல விநாயகர் கோயிலில் சபதம் ஏதாவது போட்டிருந்தாரான்னு தெரியல. சரி போனது போச்சு, ஏதோ ஆர்வ கோளாறுல இப்பவாச்சும் இவருக்கு படிக்கனும்னு தோனுச்சேன்னு சந்தோஷப்பட்டா மனுஷன் இப்படி தில்லாலங்கடி வேலைய செய்ஞ்சுட்டு கண்ணாமூச்சி காட்டிகிட்டு இருக்காரு. கல்வித்துறை அமைச்சர் பத்தாவது படிச்சிருக்கனும்னு எந்த சட்டமும் இந்த நாட்டுல இல்ல….எந்த தகுதியும் இல்லை என்பதுதான் அரசியலுக்கு தேவையான முக்கியத் தகுதியே. அப்புறம் எதுக்கு இவருக்கு இந்த விபரீத ஆசையெல்லாம். இவர சொல்லி தப்பு இல்ல இவர் கூட இருக்குற ஏதோ ஒரு அடிபொடி தான் அண்ணனை இப்படி உசுப்பேத்தி விட்டிருக்கனும். இப்ப பாருங்க ரணகளமாகிடுச்சு. நல்ல பிள்ளையாய் இவர் போய் பரீட்சையை எழுதுவாருன்னு பார்த்தா இவரோட Substitute-ஐ அனுப்பி வச்சிருக்கார் மனுசன். கிரிக்கெட் மேட்சுன்னு நெனச்சிட்டாரு போல. பாண்டிச்சேரி முதல்வர் கல்வித்துறையை சரியான ஆளுகிட்ட தான் ஒப்படைச்சிருக்காரு. நல்லவேளை இவரை சுகாதாரத் துறைக்கு அமைச்சராக நியமிக்கவில்லை…நியமித்திருந்தால் இந்நேரம் முன்னாபாய் M.B.B.S மாதிரி ஏதாவது கலாட்டா பண்ணியிருப்பார். எப்படியோ பாண்டிச்சேரி அரசியல்ல அண்ணனுக்கு தனி இடம் கிடைச்சு போச்சு.
வரலாறு முக்கியம் அமைச்சரே !
----------------------------------------------------------------------------------
மம்தா தீதி ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க….தேசிய அரசியல் தெரிஞ்சவங்களுக்கு தீதிய பத்தி நல்லாத் தெரியும். அதிரடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் இப்படி கலந்து கட்டி அடிச்சு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா தரப்பையும் சில நேரங்களில் அலற வைத்துவிடுவார். வார்டு கவுன்சிலர்களே பள பளன்னு பவனி வரும்போது தீதியின் எளிமை அரசியலைத் தாண்டி அவர் மேல் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்த தவறியேதில்லை. அசுர பலத்துடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயற்சித்தும் அசைக்க முடியாத காம்ரேடுகளின் கோட்டையை அசால்ட்டாக தூக்கி ஓரமாக வைத்துவிட்ட பெருமை முழுக்க முழுக்க தீதிக்கே சொந்தம். இப்படி பல பெருமைகளை தனது அரசியல் பக்கங்களில் நிரப்பிக் கொண்டவர் சமீப காலங்களில் அடிக்கும் அரசியல் ஸ்டண்டைப் பார்த்தால் அடுத்தமுறை மீண்டும் காம்ரேடுகளை இவரே பதவியில் கொண்டுவந்து அமர்த்திவிடுவார் போலத் தெரிகிறது. பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவேன் என பரபரப்பாக அறிக்கை எல்லாம் விட்டவர், மறு நாளே U-Turn அடிப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. இதை வேறு அரசியல் தலைவர்கள் யாராவது செய்திருந்தால் ஆச்சரியப்படாமல் இருந்திருக்கலாம் ஆனால் தீதி செய்ததுதான் கொஞ்சம் புருவத்தை உயரச் செய்துவிட்டது. ஒட்டு மொத்த மக்களையும் கொதிக்கச் செய்துள்ள இந்த விலை உயர்வை திடமாக எதிர்த்து கொஞ்சம் ஆறுதல் தருவார் எனப் பார்த்தால் இவர் வடிவேல் பாணியில் அடுத்த முறை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு மக்களை அந்தரத்தில் விட்டுவிட்டார். இன்னும் ஆறு மாதத்திற்குள் அரசாங்கம் பெட்ரோல் விலையை கண்டிப்பாக உயர்த்தும். உத்திரப்பிரதேச தேர்தலுக்காக வேண்டுமென்றே விலையை செயற்கையாக ஏற்றிவிட்டு இப்போது குறைப்பது போல பாவ்லா காட்டியிருக்கிறார்கள். ஆக்ஷன் ராணி அடுத்த முறை என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். போதாத குறைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தன் கட்சிக்காரரை விடுவித்ததாக சமீபத்தில் வந்த செய்தியை பார்த்தபோது கூடிய விரைவில் தீதி மற்ற சராசரி அரசியல்வாதிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலத் தெரிகிறது. என்னமோ செய்யுங்க தீதி.
Monday, November 7, 2011
அன்னா (ஹசாரே) கோர்னிக்கோவ்
சமீப காலங்களில் இந்தியாவின் எந்த மீடியாவை எட்டிப் பார்த்தாலும் அன்னா&கோ-வினரின் வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மீடியாக்களுக்கு அவர்கள் தேவையா அல்லது அவர்களுக்கு மீடியா தேவையா என்பது புரியவில்லை. போதாத குறைக்கு அண்ணாச்சி திக்விஜய்சிங் வேறு தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைகாட்சி சேனலில் தோன்றி அன்னா&கோ-வினரை போட்டுத்தாக்கி தானும் ரவுடிதான் என மக்கள் மனதில் திகிலை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
நிகழ்காலத்தில் இந்தியாவில் பிரபலமாவதற்கு பெரிய அறிவாளியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை ஊழலுக்கு எதிரான பேர்வழியாக காட்டிக்கொள்ள வேண்டும், ஒரு ஆயிரம் பேரை எப்படியாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணைத்துவிட்டு, தடாலடியாக ஒரு உண்ணாவிரதத்தை நடத்தினால் போதும். மது இல்லாத மலரைக்கூட முகரத் துடிக்கும் காய்ந்துப்போன வண்டைப்போல மீடியாக்கள் எல்லா பக்கத்திலும் உங்களை செய்திகளில் போட்டு தங்கள் தினத்தை ஒப்பேற்றிவிடுவார்கள். உலகெங்கிலும் உள்ள பிரபல சேனல்களில் வரும் செய்திகளை Ctrl+c & Ctrl+v செய்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் பித்துக்குளி ஆசாமிகளுக்கு யார் செய்தி கொடுத்தாலும் ஒ.கே தான்.
இன்னும் ஒரு படி கொஞ்சம் மேலே போக விரும்பினால், சென்னையிலோ, டெல்லியிலோ ஒரு பத்து யுவதிகளை கையில் மெழுவர்த்தி ஏந்தி நின்று போஸ் கொடுக்கும்படி செய்துவிட்டால் போதும்…உங்கள் பிரபல பயணம் டாப்கியரில் செல்ல ஆரம்பித்துவிடும். இந்த Candle light vigil, Candle light dinner போன்ற வஸ்த்துக்களையெல்லாம் ஏதோ ஒரு வீணாய்ப்போன NRI ஆசாமி எங்கிருந்தோ தொத்திக் கொண்டு வந்து இந்தியாவில் பரப்பி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் அறிந்த வரைக்கும் ஐந்து ஆண்டுக்கு முன்னால் கூட இந்த மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது போன்ற வகையறா எல்லாம் இந்தியாவில் புழக்கத்திற்கே வரவில்லை. கேரளாவில் காம்ரேடுகள் இரவு நேர போராட்டங்களின் போது தீப்பந்தத்தை கையில் ஏந்தி செல்வதை சில நேரங்களில் பார்த்ததோடு சரி….இந்தியா ஒளிர்கிறது என்பதை மக்கள் தப்பாக புரிந்துகொண்டுவிட்டார்கள் போலத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது.
இவர்கள் போட்ட கூச்சலில் இப்போதெல்லாம் யாராவது Foot Ball, Volley Ball, கோபால் என எது சொன்னாலும் என் காதில் லோக்பால் என்றே கேட்கிறது. தங்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக சட்டமாக அமல்படுத்தாவிட்டால் உன் பேச்சு க்கா, போ உன்கிட்டே பேசமாட்டேன்…என இவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது லொள்ளு சபா காமெடியை விட அதிகமாக சிரிப்பை வரவழைக்கிறது.. போதாத குறைக்கு காங்கிரஸ் மேல் உள்ள காண்டில் இவர்கள் இன்னொரு ஊழல் அரசியல்வாதியை மறைமுகமாக ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய முனைவது லூசுத்தனமாக இருக்கிறது. இவர்களின் நோக்கம் லோக்பாலை வலியுறுத்துவது மட்டுமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது Hidden Agenda இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போவாதாக சொல்பவர்கள் அந்த கட்சிக்கு மாற்றாக எந்த வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பதை தெளிவாக்க வேண்டும். நம்மூரில் தேர்தல்களில் நடுநிலைமை எல்லாம் வகிக்க முடியாது. எந்த கட்சியும் யோக்கியர்களை நிறுத்தாதபோது காங்கிரஸை மட்டுமே இவர்கள் எதிர்ப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. திருடர்களில் சூப்பர் திருடன், சுமாரான திருடன் என பாகுபாடு பார்ப்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதைத்தான் இப்பொழுது முழு மூச்சாக இவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் Justify செய்ய ஒரு சின்ன அறிவாளிகளின் கூட்டம் இவர்கள் பின்னால் இருக்கிறது.
இவர்கள் கொண்டுவர விரும்பும் சட்டத்தை எந்த தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எந்த அமைச்சர் தங்களிடம் பேசவேண்டும்/பேச கூடாது, தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டை யார் கூறினாலும் அடுத்த நிமிடமே இது ஒரு சதிவேலை என கூறி ஜகா வாங்குவது என பல பரிமாண வளர்ச்சியை அடைந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அரசியல்வாதிகளுக்கு இணையான வேகத்துடன் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவியில் நீடிக்ககூடாது என இவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு யாரிடம் போய் லோக்பாலை நிறைவேற்ற கேட்பார்கள் எனத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியாமல் சும்மானாச்சும் வெறும் செய்திகளில் இந்த மாதிரி முட்டாள்தனமாக எதையாவது உளறிக்கொட்டிக் கொண்டிருந்தால் இருக்கும் பத்து பேரும் மெல்ல கழண்டு கொள்வார்கள்.
1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு சில ஆயிரம் பேரை திரட்டிவிட்டதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேட்கலாம் என்றால் நம்மூர் கோடம்பாக்க சுனாமி நமீதா கூட நாளையே அதைவிட ஒரு பெரிய கூட்டத்தை கூட்டிக் காட்டுவார். அப்புறம் அவர் வைக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என மீடியாக்கள் அலற ஆரம்பித்துவிடும். இவர்கள் செய்யும் லீலைகளுக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை வேறு துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்….காந்தி இருந்திருந்தால் தலையில் அடித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையிருந்தால் முதலில் மக்களை திருத்துவதற்கு வழியை தேடியிருக்கவேண்டும் அதைவிட்டு விட்டு ஒரு சின்ன சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என நினைப்பது அறியாமையின் உச்சகட்டம். ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு சட்டத்தையும் எவனும் முழுதாக மதிக்காதபோது இந்த லோக்பால் பில் இன்னொரு சட்டமாக அரசியல் அமைப்பு சாசனத்தில் பதியப்படுவதை தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தப்போவதில்லை. வாத்தியார் பாடியது போல “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”…அவ்ளோதான்.
----------------------------------------------------------------------------------

ஸ்டெபியும், மோனிகா செலஸும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிறுக்காவிட்டால் அவர்களை இன்றைய தேதிக்கு யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வெல்லாமலே சிலரை அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது அல்லது பிடித்துவிடுகிறது. அம்மணி அன்னா கோர்னிக்கோவ் சந்தேகமே இல்லாமல் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். கேப்ரியாலா சபாடினிக்கு பிறகு வறண்டு போயிருந்த டென்னிஸ் உலகத்தை மீட்டெடுத்த பெருமை பேரிளம்பெண் அன்னா கோர்னிக்கோவையே சேரும்.
சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விடலைப்பையன் சின்ன வைரஸ் ப்ரோகிராமை எழுதி நெட்டில் விட்டுவிட்டான். அந்த ஆசாமி செய்த ஒரே நல்ல விஷயம் அந்த ப்ரோகிராமிற்கு ஒரு நல்ல பெயரை வைத்தது தான்…அதன் பெயர் அன்னா கோர்னிக்கோவ் :-)
அன்னாவை பற்றி ஏன் இதுவரை எழுதவில்லை என்று கேட்ட நண்பர் எந்த அன்னா என்று குறிப்பிட்டு சொல்ல மறந்ததின் விளைவுதான் மேலே உள்ள மேட்டருக்கு மூல காரணம். மற்றபடி எனக்கு எப்போதும் பிடித்த டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ மட்டுமே.
நிகழ்காலத்தில் இந்தியாவில் பிரபலமாவதற்கு பெரிய அறிவாளியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை ஊழலுக்கு எதிரான பேர்வழியாக காட்டிக்கொள்ள வேண்டும், ஒரு ஆயிரம் பேரை எப்படியாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணைத்துவிட்டு, தடாலடியாக ஒரு உண்ணாவிரதத்தை நடத்தினால் போதும். மது இல்லாத மலரைக்கூட முகரத் துடிக்கும் காய்ந்துப்போன வண்டைப்போல மீடியாக்கள் எல்லா பக்கத்திலும் உங்களை செய்திகளில் போட்டு தங்கள் தினத்தை ஒப்பேற்றிவிடுவார்கள். உலகெங்கிலும் உள்ள பிரபல சேனல்களில் வரும் செய்திகளை Ctrl+c & Ctrl+v செய்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் பித்துக்குளி ஆசாமிகளுக்கு யார் செய்தி கொடுத்தாலும் ஒ.கே தான்.
இன்னும் ஒரு படி கொஞ்சம் மேலே போக விரும்பினால், சென்னையிலோ, டெல்லியிலோ ஒரு பத்து யுவதிகளை கையில் மெழுவர்த்தி ஏந்தி நின்று போஸ் கொடுக்கும்படி செய்துவிட்டால் போதும்…உங்கள் பிரபல பயணம் டாப்கியரில் செல்ல ஆரம்பித்துவிடும். இந்த Candle light vigil, Candle light dinner போன்ற வஸ்த்துக்களையெல்லாம் ஏதோ ஒரு வீணாய்ப்போன NRI ஆசாமி எங்கிருந்தோ தொத்திக் கொண்டு வந்து இந்தியாவில் பரப்பி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் அறிந்த வரைக்கும் ஐந்து ஆண்டுக்கு முன்னால் கூட இந்த மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது போன்ற வகையறா எல்லாம் இந்தியாவில் புழக்கத்திற்கே வரவில்லை. கேரளாவில் காம்ரேடுகள் இரவு நேர போராட்டங்களின் போது தீப்பந்தத்தை கையில் ஏந்தி செல்வதை சில நேரங்களில் பார்த்ததோடு சரி….இந்தியா ஒளிர்கிறது என்பதை மக்கள் தப்பாக புரிந்துகொண்டுவிட்டார்கள் போலத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது.
இவர்கள் போட்ட கூச்சலில் இப்போதெல்லாம் யாராவது Foot Ball, Volley Ball, கோபால் என எது சொன்னாலும் என் காதில் லோக்பால் என்றே கேட்கிறது. தங்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக சட்டமாக அமல்படுத்தாவிட்டால் உன் பேச்சு க்கா, போ உன்கிட்டே பேசமாட்டேன்…என இவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது லொள்ளு சபா காமெடியை விட அதிகமாக சிரிப்பை வரவழைக்கிறது.. போதாத குறைக்கு காங்கிரஸ் மேல் உள்ள காண்டில் இவர்கள் இன்னொரு ஊழல் அரசியல்வாதியை மறைமுகமாக ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய முனைவது லூசுத்தனமாக இருக்கிறது. இவர்களின் நோக்கம் லோக்பாலை வலியுறுத்துவது மட்டுமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது Hidden Agenda இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போவாதாக சொல்பவர்கள் அந்த கட்சிக்கு மாற்றாக எந்த வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பதை தெளிவாக்க வேண்டும். நம்மூரில் தேர்தல்களில் நடுநிலைமை எல்லாம் வகிக்க முடியாது. எந்த கட்சியும் யோக்கியர்களை நிறுத்தாதபோது காங்கிரஸை மட்டுமே இவர்கள் எதிர்ப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. திருடர்களில் சூப்பர் திருடன், சுமாரான திருடன் என பாகுபாடு பார்ப்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதைத்தான் இப்பொழுது முழு மூச்சாக இவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் Justify செய்ய ஒரு சின்ன அறிவாளிகளின் கூட்டம் இவர்கள் பின்னால் இருக்கிறது.
இவர்கள் கொண்டுவர விரும்பும் சட்டத்தை எந்த தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எந்த அமைச்சர் தங்களிடம் பேசவேண்டும்/பேச கூடாது, தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டை யார் கூறினாலும் அடுத்த நிமிடமே இது ஒரு சதிவேலை என கூறி ஜகா வாங்குவது என பல பரிமாண வளர்ச்சியை அடைந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அரசியல்வாதிகளுக்கு இணையான வேகத்துடன் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவியில் நீடிக்ககூடாது என இவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு யாரிடம் போய் லோக்பாலை நிறைவேற்ற கேட்பார்கள் எனத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியாமல் சும்மானாச்சும் வெறும் செய்திகளில் இந்த மாதிரி முட்டாள்தனமாக எதையாவது உளறிக்கொட்டிக் கொண்டிருந்தால் இருக்கும் பத்து பேரும் மெல்ல கழண்டு கொள்வார்கள்.
1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு சில ஆயிரம் பேரை திரட்டிவிட்டதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேட்கலாம் என்றால் நம்மூர் கோடம்பாக்க சுனாமி நமீதா கூட நாளையே அதைவிட ஒரு பெரிய கூட்டத்தை கூட்டிக் காட்டுவார். அப்புறம் அவர் வைக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என மீடியாக்கள் அலற ஆரம்பித்துவிடும். இவர்கள் செய்யும் லீலைகளுக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை வேறு துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்….காந்தி இருந்திருந்தால் தலையில் அடித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையிருந்தால் முதலில் மக்களை திருத்துவதற்கு வழியை தேடியிருக்கவேண்டும் அதைவிட்டு விட்டு ஒரு சின்ன சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என நினைப்பது அறியாமையின் உச்சகட்டம். ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு சட்டத்தையும் எவனும் முழுதாக மதிக்காதபோது இந்த லோக்பால் பில் இன்னொரு சட்டமாக அரசியல் அமைப்பு சாசனத்தில் பதியப்படுவதை தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தப்போவதில்லை. வாத்தியார் பாடியது போல “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”…அவ்ளோதான்.
----------------------------------------------------------------------------------

ஸ்டெபியும், மோனிகா செலஸும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிறுக்காவிட்டால் அவர்களை இன்றைய தேதிக்கு யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வெல்லாமலே சிலரை அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது அல்லது பிடித்துவிடுகிறது. அம்மணி அன்னா கோர்னிக்கோவ் சந்தேகமே இல்லாமல் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். கேப்ரியாலா சபாடினிக்கு பிறகு வறண்டு போயிருந்த டென்னிஸ் உலகத்தை மீட்டெடுத்த பெருமை பேரிளம்பெண் அன்னா கோர்னிக்கோவையே சேரும்.
சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விடலைப்பையன் சின்ன வைரஸ் ப்ரோகிராமை எழுதி நெட்டில் விட்டுவிட்டான். அந்த ஆசாமி செய்த ஒரே நல்ல விஷயம் அந்த ப்ரோகிராமிற்கு ஒரு நல்ல பெயரை வைத்தது தான்…அதன் பெயர் அன்னா கோர்னிக்கோவ் :-)
அன்னாவை பற்றி ஏன் இதுவரை எழுதவில்லை என்று கேட்ட நண்பர் எந்த அன்னா என்று குறிப்பிட்டு சொல்ல மறந்ததின் விளைவுதான் மேலே உள்ள மேட்டருக்கு மூல காரணம். மற்றபடி எனக்கு எப்போதும் பிடித்த டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ மட்டுமே.
Tuesday, November 1, 2011
கார்கூந்தல் களவுகள் -2
மூடப்பட்டிருந்த அந்த அறையின் கதவை மெல்ல திறந்து உள்ளே நுழைந்ததும் கட்டிலில் படுத்திருந்த அப்பா லேசாக தலையை திருப்பி என்னைப் பார்த்தார். ஜன்னலுக்கு அருகே அவரின் நெருங்கிய தோழனாகவே மாறிப்போய்விட்ட அந்த பிஃலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் “இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா” என கண்ணதாசனின் வரிகளில் தன்னை தொலைத்தபடி பாடிக்கொண்டிருந்தார் TMS. இரவு நேரங்களில் சிலோன் ஒளிபரப்பில் வரும் பழைய பாடல்களை விரும்பி கேட்டபடியே அம்மாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்த நடுத்தர வயது அப்பாவின் தோற்றம் மனதில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
இரண்டு நிமிடம் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல நடந்து கட்டிலின் விளிம்பிற்கு அருகில் சென்றதும் உட்காரும்படி தனது இடது கையை உயர்த்தினார். அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கண்ணீர் வெடித்து கிளம்பியது. உழைத்து களைத்து ஓய்ந்துப்போயிருந்த அவரின் வலது கையையும் உதடுகளின் ஒரு பக்கத்தையும் இயற்கை வென்றுவிட்டிருந்தது. அடித்தும், அணைத்தும் வளர்த்த அப்பாவின் வலது கையை அந்த நிலையில் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. கடவுள் கருணையற்றவன் என்ற என் நிலைப்பாடு மேலும் திண்ணமாகியது.
என் நிலையை உணர்ந்தவர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியை அவர் கண்களின் ஓரத்தில் மெலிதாக வழிந்த கண்ணீர் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார முயற்சி செய்தவர் லேசாக இடப்பக்கம் திரும்பி கையை கட்டிலின் மேல் ஊன்ற, அவரை லேசாக பிடித்து திருப்பி எழுப்பி உட்காரவைத்தேன். தலையணையை முதுக்கு வைக்க முயற்சிக்க வேண்டாமென தடுத்துவிட்டார்.
இயற்கையின் விதிப்படி தோள்களில் சுருக்கம், மூக்கு கண்ணாடி, என பல விஷயங்களை அப்பா ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆனால் நேற்று இரவு நடந்த விஷயம் அவர் முகத்தில் லேசான கவலையை இறக்கிவைத்துவிட்டு போயிருப்பதை பார்க்க முடிந்தது.
நல்லாயிருக்கியாடா திரு? குழறியபடி வார்த்தைகள் வந்து விழந்தன.
ம்ம்ம்..இருக்கேன்பா…
அம்மா போன் பண்ணாங்களா?
இல்லப்பா…டாக்டர்.வேதாசலத்துகிட்ட ஒர்க்பண்ற நர்ஸ் கால் பண்ணி தகவல் சொன்னாங்க….ஏம்ப்பா எனக்கு தகவல் சொல்ல வேணாம்னு சொன்னீங்க…
பதில் ஏதும் பேசாமல் மெளனமாக தலையை கவிழ்ந்தபடி இருந்தவரின் வலது கரத்தை என் கரங்களுடன் கோர்த்துகொண்டேன். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் குடும்பத்தின் நலனுக்காகவே உழைத்து தேய்திருந்த அந்த கரம் தனது மென்மையை தொலைத்துவிட்டிருந்தது. உலகின் மற்ற எந்த ஜீவராசியை விடவும் இரக்கமற்றவனாக தோன்றினான் இறைவன்.
அந்த பொண்ணு எப்படி இருக்கா திரு? அமைதியை கலைக்க முற்பட்டுக்கொண்டிருந்தார் அப்பா. கிருத்திகாவை இரண்டொரு முறை வீட்டுக்கு அழைத்து வந்ததை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருந்தார்.
நல்லாயிருக்காங்கப்பா…
இந்த சூழலில் கிருத்திகாவைப் பற்றி மேற்கொண்டு எதுவும் பேச மனம் இணங்கவில்லை. ஆனால் அப்பாவின் பேச்சு மறுபடியும் அவளைச் சுற்றியே வந்தது. அதற்கு அர்த்தமும் இருந்தது.
உங்க அம்மாவுக்கு அந்த பொண்ணுமேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருக்கு திரு….போனமுறை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தபோது….
அப்பா…….பேசிக்கொண்டே போனவரை இடைமறித்தான்.
நீங்க முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்கப்பா..எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.
இல்ல திரு…என்னோட வாழ்க்கையில இனிமே நான் வாழப்போற நாட்கள் எல்லாம் complimentary days தான்…உன்னோட எல்லா தேவையையும் நான் நிறைவேற்றியிருக்கேனான்னு தெரியல….நீ பழைய திருவா, சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு போயிடனும்டா...நீ வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு திரு….உன்னோட வலி தெரியாதவன் இல்லப்பா நான். நீ அந்த வேதனையிலிருந்து வெளியே வந்து புதுசா ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாதான் நானும் உன் அம்மாவும் சந்தோஷமா இருக்க முடியும்…யோசிச்சி நல்ல முடிவா சொல்லு திரு.
சரிப்பா…நீங்க சொல்றது புரியுது..நான் கண்டிப்பா யோசிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. நாம காலையில பேசுவோம். சொல்லிக்கொண்டே எழுந்தவனின் மனதில் கிருத்திகா வந்து நிறைந்து நின்றாள், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரும் நிழல் போல.
(தொடரும்)
இரண்டு நிமிடம் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல நடந்து கட்டிலின் விளிம்பிற்கு அருகில் சென்றதும் உட்காரும்படி தனது இடது கையை உயர்த்தினார். அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கண்ணீர் வெடித்து கிளம்பியது. உழைத்து களைத்து ஓய்ந்துப்போயிருந்த அவரின் வலது கையையும் உதடுகளின் ஒரு பக்கத்தையும் இயற்கை வென்றுவிட்டிருந்தது. அடித்தும், அணைத்தும் வளர்த்த அப்பாவின் வலது கையை அந்த நிலையில் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. கடவுள் கருணையற்றவன் என்ற என் நிலைப்பாடு மேலும் திண்ணமாகியது.
என் நிலையை உணர்ந்தவர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியை அவர் கண்களின் ஓரத்தில் மெலிதாக வழிந்த கண்ணீர் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார முயற்சி செய்தவர் லேசாக இடப்பக்கம் திரும்பி கையை கட்டிலின் மேல் ஊன்ற, அவரை லேசாக பிடித்து திருப்பி எழுப்பி உட்காரவைத்தேன். தலையணையை முதுக்கு வைக்க முயற்சிக்க வேண்டாமென தடுத்துவிட்டார்.
இயற்கையின் விதிப்படி தோள்களில் சுருக்கம், மூக்கு கண்ணாடி, என பல விஷயங்களை அப்பா ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆனால் நேற்று இரவு நடந்த விஷயம் அவர் முகத்தில் லேசான கவலையை இறக்கிவைத்துவிட்டு போயிருப்பதை பார்க்க முடிந்தது.
நல்லாயிருக்கியாடா திரு? குழறியபடி வார்த்தைகள் வந்து விழந்தன.
ம்ம்ம்..இருக்கேன்பா…
அம்மா போன் பண்ணாங்களா?
இல்லப்பா…டாக்டர்.வேதாசலத்துகிட்ட ஒர்க்பண்ற நர்ஸ் கால் பண்ணி தகவல் சொன்னாங்க….ஏம்ப்பா எனக்கு தகவல் சொல்ல வேணாம்னு சொன்னீங்க…
பதில் ஏதும் பேசாமல் மெளனமாக தலையை கவிழ்ந்தபடி இருந்தவரின் வலது கரத்தை என் கரங்களுடன் கோர்த்துகொண்டேன். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் குடும்பத்தின் நலனுக்காகவே உழைத்து தேய்திருந்த அந்த கரம் தனது மென்மையை தொலைத்துவிட்டிருந்தது. உலகின் மற்ற எந்த ஜீவராசியை விடவும் இரக்கமற்றவனாக தோன்றினான் இறைவன்.
அந்த பொண்ணு எப்படி இருக்கா திரு? அமைதியை கலைக்க முற்பட்டுக்கொண்டிருந்தார் அப்பா. கிருத்திகாவை இரண்டொரு முறை வீட்டுக்கு அழைத்து வந்ததை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருந்தார்.
நல்லாயிருக்காங்கப்பா…
இந்த சூழலில் கிருத்திகாவைப் பற்றி மேற்கொண்டு எதுவும் பேச மனம் இணங்கவில்லை. ஆனால் அப்பாவின் பேச்சு மறுபடியும் அவளைச் சுற்றியே வந்தது. அதற்கு அர்த்தமும் இருந்தது.
உங்க அம்மாவுக்கு அந்த பொண்ணுமேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருக்கு திரு….போனமுறை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தபோது….
அப்பா…….பேசிக்கொண்டே போனவரை இடைமறித்தான்.
நீங்க முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்கப்பா..எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.
இல்ல திரு…என்னோட வாழ்க்கையில இனிமே நான் வாழப்போற நாட்கள் எல்லாம் complimentary days தான்…உன்னோட எல்லா தேவையையும் நான் நிறைவேற்றியிருக்கேனான்னு தெரியல….நீ பழைய திருவா, சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு போயிடனும்டா...நீ வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு திரு….உன்னோட வலி தெரியாதவன் இல்லப்பா நான். நீ அந்த வேதனையிலிருந்து வெளியே வந்து புதுசா ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாதான் நானும் உன் அம்மாவும் சந்தோஷமா இருக்க முடியும்…யோசிச்சி நல்ல முடிவா சொல்லு திரு.
சரிப்பா…நீங்க சொல்றது புரியுது..நான் கண்டிப்பா யோசிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. நாம காலையில பேசுவோம். சொல்லிக்கொண்டே எழுந்தவனின் மனதில் கிருத்திகா வந்து நிறைந்து நின்றாள், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரும் நிழல் போல.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
