“பதவி என்பது எங்கள் தோளில் இருக்கும் துண்டு” – கழகங்களின் எந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு பெரிய தலையோ அல்லது அடிபொடியே இந்த டயலாக் சொல்லிக் கொண்டிருப்பதை தவறாமல் கேட்க முடியும். காங்கிரஸ்காரர்கள் இதையே கொஞ்சம் ஆல்டர் செய்து இனி வரும் நாட்களில் “பதவி என்பது நாங்கள் போட்டிருக்கும் மேற்சட்டை” என பொதுக்கூட்டங்களில் முழங்கலாம்.…முடிந்தால் Patent ரைட்ஸ் கூட வாங்கிக் கொள்ளலாம். ஒரு பயலும் இவர்களை கேள்வி கேட்கமுடியாது எப்படியும் முதல்வராகி விடவேண்டும் என நினைப்பவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உடனடியாக சேர்ந்துவிடுவது நலம். (தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர்த்து), ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம்.
Chief Ministers are not elected but selected…இந்தியாவில் தேசிய கட்சிகளின் ஸ்லோகம் இதுதான். அதிலும் நெ.24, அக்பர் ரோட்டில் வெள்ளை வெளேரென்று இருக்கும் திவான்களின் மீது சாய்ந்து படுத்தபடியே அரசியல் செய்துக் கொண்டிருக்கும் தியாகிகள் இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அங்கு யாருக்காவது வியர்க்க ஆரம்பித்தால் உடனே நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் காங்கிரஸ் முதல்வர்கள் யாருடைய சட்டையையாவது கழற்றிவிடுகிறார்கள். பேசாமல் இனிமேல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்களை ரவுண்ட்-ராபின் முறையிலோ அல்லது குலுக்கல் சீட்டு முறையிலோ தேர்ந்தெடுக்கலாம். அட்லீஸ்ட் Probability அடிப்படையில் நாமும் முதல்வராகிவிடலாம் என எல்லா கோஷ்டி மற்றும் சப்-கோஷ்டிகளும் கொஞ்சம் அடக்கிவாசிப்பார்கள்.
முழுதாக இரண்டு ஆண்டுகள் கூட முடிந்திராத நிலையில் ஆந்திராவில் வெற்றிகரமாக மூன்று முதல்வர்களை மாற்றிப் போட்டு காங்கிரஸா கொக்கா என நிரூபித்துவிட்டார்கள். Workaround, Trail and Error மெத்தட் மட்டும்தான் தெரியும் போல இருக்கு இவர்களுக்கு. தெலுங்குவாடுக்களின் பிரதேசத்தில் இருக்கும் அரசியல் நிலவரத்தைப் பார்த்தால், 2014 வரை நாயுடு காத்திருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. பெரிய அளவில் இல்லையென்றாலும் Considerable Damage – ஐ ஏற்படுத்துவதற்கு சிரஞ்சீவியும், கே.சி.ஆரும் கூட காத்துக்கொண்டிருக்கிறார்கள். அசுர பலத்துடன் இருந்த காங்கிரசுக்கு ஒரே வருடத்தில் எல்லாமே தலைகீழாக மாறி தலைவலியை கொடுக்கத் தொடங்கியிருப்பது நிஜம். ஒரு தனி மனிதரின் உழைப்பால் உச்சத்தை தொட்ட காங்கிரஸ் அதே தனி மனிதரின் மரணத்தால் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது.
இருபத்தைந்து வருட அரசியல் வாழ்க்கை, இரண்டு முறை ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பு, கிராமப்புற மேம்பாடு, கலால், கல்வி மற்றும் சுகாதாரத்துறை Portfolio-க்களில் ஆந்திர மாநில அமைச்சராக பணியாற்றிய அனுபவம், நான்கு முறை லோக் சபாவிற்கு வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஐந்து வருடம் An Aggressive Opposistion Leader ஆக பணியாற்றிய மனிதர், தொடர்ச்சியாக இருமுறை ஆந்திர முதல்வர் பதவியை அலங்கரித்தவர்…..On top of everything, காம்ரேட் ஜோதிபாசு, தமிழக முதல்வர் மு.க. வரிசையில் தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியையே பார்த்திராதவர்….ஆந்திராவில் அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக படித்திருக்க வேண்டிய, YSR a.k.a “கடப்பா டைகரின்” மேற்கண்ட Resume-ஐ, அவருடைய மகன் “ஜூனியர் கடப்பா டைகர்” ஜெகன் இதுவரை படிக்கவே இல்லை என்பதை காணிப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் கற்பூரம் அடித்து சொல்லிவிடலாம்.
“Politics for Dummies”, “முப்பது நாளில் முதல்வராவது எப்படி” போன்ற ஏதோ ஒரு உட்டாலக்கடி புத்தகத்தை சன்டே மார்க்கெட்டில் இருந்து கடத்தி வந்து, சும்மா ஒப்புக்கு பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு (!), மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், நான் முதல்வர் பதவிக்கு ரெடி என சொல்வது நடிகர்களுக்கு ஒ.கே. பாஸ்..ஆனால் ஒரு முன்னால் முதல்வரின் மகனுக்கு இது ஸ்வல்பா ஒவர் சாரே. இரண்டு வருட லோக் சபா எம்.பி என்ற ஒரே ஒரு அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மாநில முதல்வர் பதவிக்கு குறி வைப்பது என்பது கத்துக்குட்டி சாஃப்ட்வேர் டெவலப்பர், ப்ராஜெக்ட் மேனேஜர் ரோலுக்கு ஆசைப்படுவது மாதிரி இருக்கிறது. “அத்தனைக்கும் ஆசைப்படு” போன்ற இன்ஸ்டெண்ட் போதனைகளை சொல்லும் பெரியவர்கள் கொஞ்சம் கூடுதலாக “அதற்கு இந்தளவிற்கு கஷ்டப்படு” என சேர்த்துச் சொன்னால் எதிர்கால அரசியல் வாரிசுகளின் வாழ்க்கை ஒகோ என இருக்கும். பொதுமக்களும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதிய முதல்வரின் பெயரை மனப்பாடம் செய்யவேண்டிய தேவையற்ற வேலையும் குழந்தைகளுக்கு இருக்காது.
YSR-இன் அகால மரணம் காங்கிரஸ் கட்சியைத் தாண்டி, அனைத்து ஆந்திர மக்களுக்குமே பெரும் இழப்பு என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் மறைந்த பின் காலியான புலிவெந்துலா தொகுதிக்கு அவரின் மனைவி போட்டியிட்டபோது, ஆந்திராவின் அனைத்து எதிர்கட்சிகளும் தங்கள் வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது, YSR என்ற தனி மனிதருக்கு ஆந்திராவில் இருந்த செல்வாக்கை உணர்த்தியது. ஆனால் அப்படி ஒரு செல்வாக்கை அடைவதற்கு மனிதர் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளார். தனது உழைப்பு, ஏமாற்றத்தின் வலிகள், தனக்கிழைக்கப்பட்ட அரசியல் துரோகங்கள் போன்றவற்றை மகனுக்கு சொல்லாமலே போய்விட்டாரோ எனத் தோன்றுகிறது.
1980-களில் என்.டி.ஆர் என்ற புயலில் சிக்கி ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தபோது, அவரை எதிர்த்து நிற்க திராணியில்லாமல் தவித்த காங்கிரஸ் கட்சி, வெறும் 34 வயதே நிரம்பியிருந்த YSR-ஐ ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்துவிட்டு கதவிற்கு பின்னால் சென்று மறைந்துகொண்டது. என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு வரை ஆந்திர பிரதேச முதல்வர் பதவியை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்த சீனியர் கதர் சட்டைகள் சரியான நேரத்தில் ஜகா வாங்கிவிட, இந்திரா காந்தியின் கெளவரவத்தை அன்றைய தேதிக்கு கொஞ்சமாவது கட்டிக்காத்தவர் இந்த கடப்பா டைகர் தான். சில வருடங்கள் கழித்து என்.டி.ஆரின் அலை அடங்கத் தொடங்கியவுடன் பதுங்கியிருந்த பெரிய காங்கிரஸ் தலைகள் அனைத்தும் மறுபடியும் முதல்வர் பதவிக்கு குறி வைத்து வெளியே வர, வழக்கம்போல டெல்லி ஹை-கமாண்ட் YSR-க்கு லாலி பாப் கொடுத்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது. வெறும் 37 வயதில் அலுங்காமல் குலுங்காமல் முதல்வர் ஆகிவிட துடிக்கும் “Born with Silverspoon” ஜெகன், அவர் தந்தை அதே வயதில் எவ்வளவு ஆக்ரோஷமாக அரசியலை நடத்திக்கொண்டிருந்தார் என்பதை கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிடுவது நலம். ஆந்திர காங்கிரஸில் பழம் தின்று கொட்டை போட்ட ரோசய்யா போன்ற அனுபவஸ்தர்கள் இருக்கும் போது வெறும் எமோஷனல் வேவ்வை வைத்து முதல்வர் நாற்காலிக்கு முட்டி மோதுவது இப்போதைக்கு தேவையற்ற வேலையாகவே தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளால் பந்தாடப்படும் போதெல்லாம் ஒரு சாரசரி தொண்டனைப்போல துணுக்குற்று எழுந்து கட்சிக்காக போராடிய YSR, முதல்வர் பதவியை நோக்கியும் நகர்ந்துக் கொண்டேதான் இருந்திருக்கிறார். ஒரே வித்தியாசம், ஜெகனைப் போல அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் காயை நகர்த்தி இருக்கிறார். 1982-83 களில் என்.டி.ஆரை ஒருவேளை YSR ஒரங்கட்டியிருந்தால் அனேகமாக இந்திரா இவருக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்டை கொடுத்திருக்ககூடும். வாடிவாசல் முரட்டுக்காளை ரேஞ்சிற்கு எதிர்த்தவர்களையெல்லாம் ஒரே Attempt-இல் தூக்கி வீசிக்கொண்டிருந்த தெலுங்கு தேசத்தின் முன் மல்லுக்கு நிற்கமுடியாமல் போனதால் அப்போதைக்கு முதல்வர் பதவி ஸ்லிப் ஆகிவிட்டது சீனியர் டைகருக்கு. பழம் கிடைக்கவில்லை என்றவுடன் கொஞ்சம் அடக்கிவாசித்தவர் பொறுமையாக அடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அரசியலின் அரிச்சுவடியே பொறுத்திருந்து அடிப்பதுதான். மனிதர் கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை அங்குலம் அங்குலமாக படித்திருப்பார் போலத் தெரிகிறது. காத்திருந்தவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.
(தொடரும்)
பி.கு. பதிவின் நீளம் கருதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Tuesday, December 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)

12 comments:
அருமை.
தொடரவும்.
hello,
intha pathivu miga suvarasyamaga irukirathu. keep writing. good work.
// அரசியலின் அரிச்சுவடியே பொறுத்திருந்து அடிப்பதுதான் //
சத்தியம்.
பதிவு பீகார் அரசியல் பற்றி சென்ற வாரம், ஆந்திர அரசியல் பற்றி இந்த வாரம்... கலந்துகட்டி அடிக்கிறீங்களே தல... நல்ல பதிவு....
-நவீன்
nice writing !!! let me know when is your new post coming !
அரைகிறுக்கன் (It's an intriguing ID), Subramanian Vallinayagam, M.M.A, நவீன் -- நன்றி.
Ravi,
Thnx. Will let you know.
செம கலக்கலா எழுதியிருக்கீங்க!
அப்துல்லாவின் ஸ்டேட்டஸ் மெசேஜ் பார்த்து இந்தபக்கம் வந்தேன்... நல்ல அரசியல் கட்டுரை படித்த நிறைவு!
குசும்பன்...நன்றி.
பாகம் 1 ரொம்ப நல்லா வந்திருக்கு.. அப்படியே இதை யாராச்சும் ப்ரஜா ராஜ்ஜியத்து ராஜாவுக்கும் படிச்சு காட்டினா நல்லா இருக்கும் :)
-Toto
Toto - Thanks
Post a Comment