இந்திய தேர்தல் ஆணையம் சில நேரங்களில் ரொம்ப சில்லியாக நடந்து கொள்கிறது. உ.பி.யில் யானை சிலைகளையும் அதன் காரணகர்த்தாவின் சிலைகளையும் துணியால் மூடினால் தான் ஆச்சு என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஒவராக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிலைகள் ஏதாவது ஒரு சிக்னலை அல்லது சிக்கலை மக்களுக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்த்த எல்லா எம்.ஜி.ஆர் சிலைகளும் இரட்டை விரலை காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நேருவும் இந்திராவும் கையை உயர்த்தியபடி நிற்கும் சிலைகள் கூட காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை மறைமுகமாக மக்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.
இதே போக்கில் போனால் தேர்தல் முடியும்வரை உ.பி.யில் கோயில் யானைகளைகூட மக்கள் கண்ணில் படாமல் மறைத்து வைக்கும்படி சொல்வார்கள் போலத் தெரிகிறது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. மூடி மறைக்கும்போதுதான் மனிதனுக்கு ஒரு விஷயத்தின் மீது அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்ற அடிப்படை லாஜிக்கூட தெரியாமல் என்ன சார் நீங்க….ஒரு விதத்துல பார்த்தா இது அந்த கட்சிக்கு ஓசி-யில கிடைக்குற விளம்பரம் தான். ஒருவேளை இந்த விதியை நாளை தமிழத்திற்குள் கொண்டுவந்தால் அதிகாலை சூரியனையும், மரத்தில் உள்ள அத்தனை இரட்டை இலைகளையும் திரை போட்டு மறைக்கவேண்டும் என சொல்லி விடுவார்களோ என பயமாய் இருக்கிறது. சோலார் சிஸ்டத்தை மொட்டை மாடியில் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரணம் செய்பவர்கள் கொஞ்சம் Proactive ஆக இருந்துகொள்வது நலம்.
---------------------------------------------------------------------------------
புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட்டு அறிக்கை தந்தபின் நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தியை படித்தபின் உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது. புயல் வருவதைப்பற்றி ஒரு வாரமாக எல்லா ஊடகங்களும் கூவிக் கொண்டிருக்கும்போதே மத்திய குழுவை அந்த பகுதிக்கு முன்னெச்சரிக்கையாக அனுப்பி புயல் கரையை கடந்த உடனே சேதங்களை மதிப்பிட சொல்லியிருக்கலாம். எல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து இப்படி ஒரு அறிக்கையை விடுவது கேனத்தனமாக இருக்கிறது. மத்திய குழு வரும்வரை எதையும் சீர்செய்யாமல் இருக்கும்படி சொல்கிறார்களா என்பது தெரியவில்லை.
வருமுன் காப்போம் போன்ற நீதிக்கதைகளை எல்லாம் இனிமேல் பாடப்புத்தகத்தில் தயவு செய்து அச்சடிக்காதீங்கப்பா….அதையெல்லாம் படிச்சிட்டு சின்ன குழந்தைங்ககூட நம்மள பார்த்து கேவலமா சிரிப்பாங்க… புயல் வர்ற வரைக்கும் அந்த செய்தியை வச்சி கல்லா கட்டுன நம்மூர் மீடியாக்காரர்கள் புயலுக்கு பிறகு அங்க நடக்குற எந்த மேட்டரையும் கண்டுக்காம கேமராவா தூக்கிகிட்டு ஆஸ்திரேலியா பக்கம் போய்ட்டாங்க…அங்க நம்மள பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டு இருக்காங்க….அடுத்த மேட்டர் சிக்குற வரைக்கும் வேற வழியில்ல அததான் காட்டியாகனும்…இல்லைன்னா கல்லா காலியாயிரும்…..நல்லாயிருங்கடே.
----------------------------------------------------------------------------------
நம்ம கிரிக்கெட் டீம் இனிமே வெளியே போய் ஜெயிக்கனும்னா அதுக்கு ஒரே வழி நம்மூர் Pitch Curator ஆளுங்கள வச்சி நாம விளையாடுற எல்லா பிட்சையும் ரெடி பண்ணனும் இல்லைன்னா எல்லா மேட்சையும் நம்மூர்லேயே நடத்திக்கனும்…இது ரெண்டுல ஒன்னு நடந்தாதான் இனிமே டெஸ்ட் மேட்ச் எல்லாம் ஜெயிக்கமுடியும்னு தோணுது. ஆஸ்திரேலியாவில ஏறக்குறைய எல்லா பிட்சுமே ரொம்ப quick and bouncy. அங்க seamers பப்பு மட்டும்தான் வேகும். முட்டு சந்துல கிரிக்கெட் ஆடுற கெஜாவுக்கு கூட இந்த டெக்னிக்கல் மேட்டர் தெரியும்…ஆனா நம்ம ஆளுங்க இதையெல்லாம் கண்டுக்குற மாதிரியே தெரியல.
நம்மூர்ல எல்லாமே flat pitch..பத்து ஓவர் போட்டு முடிச்சாலே பிட்ச் படுத்துக்கும், அதுக்கப்புறம் என்னதான் லொங்கு லொங்குன்னு போட்டாலும் பந்து தரைய விட்டு எழுந்துக்கவே ரொம்ப கஷ்டப்படும்…இந்த மாதிரி பிட்ச்ல மால்கம் மார்ஷல் இல்ல அவங்க தாத்தா வந்து போட்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல நம்ம ஆளுங்க ஈசியா சமாளிச்சிடுவாங்க. ஆனா ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா பக்கம் போனா பந்து கடைசி நாள் அன்னைக்குகூட தலைக்கு வருது…எவ்ளோ நேரத்துக்குத்தான் குனிஞ்சி நிமிர்ந்து எஸ்கேப் ஆகிக்கிட்டே இருக்கிறது….அதான் சீக்கிரமா திரும்பி வந்துடறாங்க. இது தெரிஞ்சும் அண்ணண் சுனில் கவாஸ்கர் புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சிக்கிட்டு எதையோ பேசிகிட்டு இருக்காரு. போதாத குறைக்கு ஒவருக்கு எத்தனை பந்துன்னு தெரியாத மீடியா குழந்தைங்க வேற அவர மாத்துங்க இவர மாத்துங்கன்னு சொல்லி கடுப்பேத்திகிட்டு இருக்காங்க
ஜென்டில்மேன், இப்ப இருக்குற ஆளுங்கல்ல டிராவிட், தெண்டுல்கர், லஷ்மண் மாதிரி ஆளுங்களுக்கு தான் இந்த மாதிரி பிட்ச் பத்தி கொஞ்சம் தெரியும்…அவங்க ட்ரவுசரே அங்க அவுந்து நிக்குது. So புது ஆளுங்களுக்கு கொஞ்சம் டைம் ஆகும்….அதுவரைக்கும் அவங்கள ஆட விட்டுதான் பழகனும்…..வேற வழியில்ல…..இல்லைன்னா எல்லா டூருக்கும் புதுசு புதுசாதான் ஆள அனுப்பனும். இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நினனச்சா, வெளிநாட்டுல இருந்து ஒரு நல்ல Pitch Curator கொண்டு வந்து இங்க மைதானத்துல வேலையை பண்ணவிட்டு அதுக்கப்புறம் நம்ம Boys-ஐ ஒழுங்கா இங்க கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணச் சொன்னா மேட்டர் சால்வ் ஆகிடும்…அப்புறம் வெளிநாட்டு கோட்ச் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்ல. .இதச் சொன்னா நம்மள பைத்தியகாரன்பாங்க. பெர்த் பிட்ச் Curator கொஞ்சம் கருணை காட்டுனா அடுத்த டெஸ்ட்ல தப்பிச்சிக்கலாம்…இல்லைன்னா girls touching hand problem the same harry potter also deal the same problem, this sapter அப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டிய நிலைமைக்கு போய்டுவாரு நம்ம கேப்டன் தோணி அண்ணண்.
Sunday, January 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment