சிலி....வரலாற்றை மாற்றி எழுத தயாராகிக்கொண்டிருக்கிறது. இரண்டு மாதத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி ஆழத்திற்கு கீழே தவித்துக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டை சேர்ந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்களை பத்திரமாக மீட்டெடுக்கும் முயற்சியின் தொடராக கேப்சூல் லிப்ட்டை ஆழ்துளை கிணற்றின் வழியாக உள்ளிறக்க ஏறக்குறைய அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார்கள். எந்த நேரமும் முதலாவது மீட்பு நிபுணர் உள்ளே அனுப்ப படலாம். சி.என்.என் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னம்பிக்கையுடன் பொறுமையாக காத்திருந்த அத்தனை தொழிலாளர்களையும் வரவேற்க ஒட்டுமொத்த சிலி மட்டுமல்லாமல் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. சிலி நாட்டின் அதிபர் மனைவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே நின்று எல்லோரையும் உற்சாகபடுத்திக் கொண்டிருப்பது மிகப்பெரிய பலம். எல்லாம் நல்லபடியாக முடிந்து அனைத்து தொழிலாளர்களும் நாளை காலைக்குள் (சிலி நேரப்படி) மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவா சிலி !!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment